வெள்ளாளர் முன்னேற்ற கழகம்

தமிழ்நாடுபதிவு எண் : 590/2010 52 /BK /2020

மண்ணையும், வேளாண்மை தொழிலையும் ஆண்ட பரம்பரை நாம். இனி நாம் எவருக்கும் அடிமை இல்லை. பிரிந்திருக்கும் நாமெல்லாம் ஒன்று பட்டால் நம் இன சொந்தங்களுக்கு எண்ணிடலங்கா உதவிகள் கிடைக்கும். நாம் அனைவரும் இணையும் நேரம் கனிந்து விட்டது. நம்முடன் பயணிக்க முன்னோர்களின் ஆசியும், இளைஞர்களின் புரட்சி படையும், நம் இனத்தை மீட்க, அடலேறுகளாய், அன்பின் ஈட்டிகளாய், தன்மான சுடர்களாய் புதிய களம் காணவும் , நம் இன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் புறப்பட்டு விட்டனர்.

“மாயைகளை உடைத்திட…
மனம் ஒன்றிணைந்திட..
வெள்ளாளர் சொந்தங்களே! வாருங்கள் ஒன்றினைவோம்!
வெற்றி பெறுவோம்!

VMK PARTY

VELLALAR MUNNETRA KAZHAGAM

அருந்தமிழ் மருந்தாக, அனைத்தையும் கற்று தேர்ந்தவர்களாக நம் சமுதாய முன்னோர்கள் திகழ்ந்தனர். சித்தர்கள், நாயன்மார்கள், வரலாற்று தலைவர்கள், கல்வியாளர்கள், மேதைகள், அரசியல் ஞானிகள் சாதனையாளர்கள் என இன்று வரை நாம் தான் தமிழ் சமுதாயத்திற்கு வழி காட்டிகளாக திகழ்ந்தோம், திகழ்ந்தும் வருகின்றோம். வேளாண் தொழிலில் மற்றவர்களுக்கு வேலை கொடுத்தவர்களாகவும், கொடுப்பவர்களாகவும் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர்கள்தான் “நம் இன வெள்ளாள முன்னேற்றக்கழகத்தின் சொந்தங்களே ஆவர். உலகெங்கிலும் நம் இனமே அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றோம். வரும் தடைகளை உடைப்போம்! வரலாறு படைப்போம்! நம் இன சொந்தங்களின் மனதில் நமது முன்னோர்களின் வரலாற்றை விதைத்திடுவோம்.

Need Help?
 
wpSolution Live Chat

Hi, Your satisfaction is our top priority, we are ready to answer your questions...