VMK PARTY
VELLALAR MUNNETRA KAZHAGAM
அருந்தமிழ் மருந்தாக, அனைத்தையும் கற்று தேர்ந்தவர்களாக நம் சமுதாய முன்னோர்கள் திகழ்ந்தனர். சித்தர்கள், நாயன்மார்கள், வரலாற்று தலைவர்கள், கல்வியாளர்கள், மேதைகள், அரசியல் ஞானிகள் சாதனையாளர்கள் என இன்று வரை நாம் தான் தமிழ் சமுதாயத்திற்கு வழி காட்டிகளாக திகழ்ந்தோம், திகழ்ந்தும் வருகின்றோம். வேளாண் தொழிலில் மற்றவர்களுக்கு வேலை கொடுத்தவர்களாகவும், கொடுப்பவர்களாகவும் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர்கள்தான் “நம் இன வெள்ளாள முன்னேற்றக்கழகத்தின் சொந்தங்களே ஆவர். உலகெங்கிலும் நம் இனமே அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றோம். வரும் தடைகளை உடைப்போம்! வரலாறு படைப்போம்! நம் இன சொந்தங்களின் மனதில் நமது முன்னோர்களின் வரலாற்றை விதைத்திடுவோம்.